மத்திய அரசில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – 47 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள்
மத்திய அரசின் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் Apprentices பதவிக்கு பல்வேறு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ள ஆர்வம் உள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பில் Apprentices பணியிடங்களுக்கு என பல்வேறு துறைகளில் மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் B.E. / B.Tech / DIPLOMA முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Graduate Apprentices (Degree holder) பணிக்கு ரூ.10,500/-ம் , Technician Apprentices (Diploma holder) பணிக்கு ரூ.9,400/-ம் மாத ஊதிய தொகையாக வழங்கப்படும்.
- இந்த Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்த்துக்கொள்ளவும்.
IPR விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்திற்கு சென்று, MHRD NATS-ல் Apprentices Training பணிக்கு விண்ணப்பிக்கவும். அதன்பின் IPR அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை இணைத்து 21.12.2021 தினத்திற்கு முன்பு விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.