மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? எவ்வளவு இருக்கும்? முழு விபரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? எவ்வளவு இருக்கும்? முழு விபரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? எவ்வளவு இருக்கும்? முழு விபரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? எவ்வளவு இருக்கும்? முழு விபரம் இதோ!

வரும் ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) தொகையை அதிகரிப்பது குறித்த நடவடிக்கை, ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் AICPI தரவுகளை வைத்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு:

இப்போது அடுத்த அகவிலைப்படிக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி (DA) தொகையை பெறுகின்றனர். ஆனால், ஜூலை 2022ல் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை திருத்தப்பட வேண்டி உள்ளது. ஆனால், இதற்கான நல்ல தொடக்கம் இதுவரை அமையவில்லை. ஏனென்றால் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022ல் அகவிலைப்படியின் போக்கு எதிர்மறையாக உள்ளது. அதாவது, ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களாக குறைந்து வருகின்றன.

Exams Daily Mobile App Download

அத்தகைய சூழ்நிலையில், இப்போது மார்ச் 2022 எண்களுக்காக காத்திருப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எண் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்படும். ஆனால், தற்போதைய நிலவரத்தின் படி அகவிலைப்படி (DA) அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்யப்படுகிறது. அதாவது ஜனவரி மற்றும் ஜூலையில் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். இப்போது வரை அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதமாக DA அதிகரித்துள்ளது. இதனிடையே நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய கடற்படை ரூ.63,200/- ஊதியத்தில் வேலை – 120+ காலிப்பணியிடங்கள்..!

ஆனால், தொழில்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போதைய விகிதத்தை விட சிறப்பாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கூடுதல் அகவிலைப்படியானது அரசாங்கத்தின் சுமையை அதிகரிக்கும். அதே சமயம், தற்போது வந்துள்ள புள்ளிவிவரங்களின்படி அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், இன்னும் 3 மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் வரவில்லை. டிசம்பர் 2021 இல், AICPI எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. ஆனால், ஜனவரி 2022 இல், அது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக இருந்தது. பின்னர் பிப்ரவரியிலும் 0.1 புள்ளிகள் குறைந்துள்ளது.

இப்படி இரண்டு மாதங்கள் தொடர் சரிவுக்கு பிறகு, தற்போதைய DA வில் இருந்து எந்தக் குறைவும் இருக்காது என்பதை இந்த எண்ணிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 124.7க்கு கீழே சென்றால், டிஏ அதிகரிப்பதில் சிக்கல் இருக்கலாம். அதே சமயம், 124க்கு கீழே சென்றாலும் டிஏவை மாறாமல் வைத்திருக்க முடியும். என்றாலும் இந்த காலகட்டத்தில் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் மேம்பட்டால், கண்டிப்பாக அடுத்த தவணைக்கான அகவிலைப்படி (DA) அதிகரிக்கும். மறுபுறம், குறியீடு கீழே சென்றால், டிஏ அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என நிபுணர்கள் கருதுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!