கோபியை கண்டு அஞ்சும் இனியா, செய்வதறியாது திகைக்கும் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
எழில், செழியனை விட இனியா தான் கோபி மீது மிகவும் பாசமாக இருப்பார். ஆனால், தற்போது கோபியின் இன்னொரு முகம் தெரிய வந்ததும் கோபியை கண்டு அஞ்சுவது போன்றும், கோபியை இனியா மொத்தமாக வெறுத்துவிடுவது போன்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் உண்மையான முகம் தற்போது தான் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே கோபியை பற்றி யார் தவறாக சொன்னாலும் பாக்கியா நம்பவே மாட்டார். ஒரு போதும் கோபி நமக்கு துரோகம் செய்யவே மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், நாளடைவில் இரவில் ராதிகாவுடன் போன் பேசுவது, குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது ஆகியவற்றால் கோபி மீது பாக்கியாவிற்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது.
Exams Daily Mobile App Download
ஆனாலும், கோபி மீது பாக்கியா நம்பிக்கையாகத் தான் இருந்தார். ஆனால், கோபியும் ராதிகாவும் மருத்துவமனையில் கையை கோர்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததை பாக்கியா பார்த்து நொந்து போகிறார். பின்பு, கோபி குணமாகி வீட்டிற்கு வந்ததும் கோபியிடம் இதுபற்றி கேட்கிறார். உடனே, கோபி பாக்கியாவிற்கு உண்மைகள் அனைத்தும் தெரிந்துவிட்டதோ என பயப்படுகிறார். இதன் பின்னர், குடும்பத்தினர்கள் முன்னிலையில் ராதிகாவுக்கு கோபிக்கும் இடையேயான உறவை பற்றி பாக்கியா கூறிவிடுகிறார்.
ஆனாலும், ஈஸ்வரி கண்டிப்பாக கோபி அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என கூறுகிறார். பின்பு, எழில் அம்மா கூறியது அனைத்துமே உண்மை தான். அப்பா இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்பது ஏற்கனவே எனக்கு தெரியும். அம்மாவுக்காக தான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன் என கூறுகிறார். இதனை கேட்டதும் இத்தனை நாட்களாக அப்பா அப்பா என்று கோபி மீது உயிரையே வைத்திருந்த இனியா கோபியை மொத்தமாக வெறுத்துவிடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.