கோபியை மொத்தமாக வெறுக்கும் பாக்கியா – குடும்பத்தினரின் முடிவு என்ன? அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபி மற்றும் ராதிகாவின் உறவு பற்றி பாக்கியாவிற்கு தெரியவந்ததும் கோபியை மொத்தமாகவே வெறுக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், கோபியின் தவறுக்கு குடும்பத்தினர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதற்கு பிறகு குடும்பத்தினர்கள் கோபியை என சொல்ல போகிறார்கள் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது கோபி வீட்டிற்கு வந்ததும் கோபியை சரமாரியாக பாக்கியா கேள்வி கேட்கிறார். பின்பு, ராதிகா இவரை விட்டு போய்விடுவாரோ என்கிற பயத்தில் தான் கோபி இப்படியெல்லாம் செய்திருக்கிறார் என அனைத்து உண்மையையும் பாக்கியா கூறுகிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகாவை நினைத்து தான் கோபி சோகமாக இருந்தார் என்பது புரியாமல் குடும்பத்தினர்கள் அனைவரும் கோபியை நினைத்து வருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில், கோபியை பற்றி பாக்கியா தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார் என ஈஸ்வரி நினைத்து இத்தனை ஆண்டுகளாக இவர் கூட வாழ்ந்த உனக்கு தெரியாதா என கூறுகிறார். பின்பு, எழிலும் அப்பா தான் தவறு செய்து கொண்டிருக்கிறார். எனக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரியும். அம்மாவுக்கு தெரிந்தால் தாங்கிக்கொள்ள மாட்டார் என்பதால் இத்தனை நாட்களாக எனது மனதிற்குள்ளேயே போட்டு புலம்பிக் கொண்டிருந்தேன்.
கோபி – ராதிகா உறவு பற்றி தெரிந்து பாக்கியா எடுக்கப்போகும் முடிவு – சீரியலின் முக்கியமான ட்விஸ்ட்!
தற்போது தான் அம்மாவிற்கே இந்த விஷயம் தெரிந்துவிட்டதே இதற்கு மேல் மறைக்க என்ன இருக்கிறது என எழில் கூறுகிறார். இதன் பின்பு பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தான் புதிராகவே இருக்கிறது. அதாவது கோபியை மீண்டும் ஏற்றுக்கொண்டு வாழ போகிறாரா அல்லது வீட்டை விட்டு பாக்கியா கிளம்புவாரா என யோசித்து கொண்டிருந்த சமயத்தில் கோபியை முழுமையாக வெறுத்து கோபியின் ஆதரவு இல்லாமலேயே பாக்கியா குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.