கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி – முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் தன் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவியாக ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்த நிலையில் இன்று அந்த திட்டத்தை முதல்வர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.
குழந்தைகளுக்கு நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய வகை உயிர் கொல்லி நோய் சுமார் ஒரு ஆண்டு காலமாக மாநிலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மிக விரைவாக செயல்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தேவைப்படும் பல நிவாரணங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் தனது தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு செம அப்டேட் – விரைவில் வெளியீடு!
அதன்படி பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பெயரில் வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தப்படும் என்று இந்த தொகையை அவர்கள் 18 வயது அடைந்த பின்பு வட்டியுடன் வங்கியில் இருந்து பெற்று கொள்ளலாம் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு பல தரப்பினரால் பாராட்டப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த நிவாரண நிதி குழந்தைகளின் எதிர்கால படிப்பு செலவுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
18 வயதிற்கு உட்பட்டவர்களை தாக்கும் கொரோனா 3ம் அலை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
இந்நிலையில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகளில் சிலர் தற்போது நிவாரண நிதியை பெறவுள்ளனர். இதை தொடர்ந்து கொரோனா தொற்றால் தங்களது தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்து தவிக்கும் குழந்தைகள் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.