EPFO பயனர்கள் கவனத்திற்கு – PF கணக்குக்கு செலுத்தும் வரியை தவிர்ப்பது எப்படி?
மத்திய அரசின் அறிவிப்பின் படி, EPFO கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேமிப்பு மற்றும் வட்டி பெறும் கணக்குகளுக்கு வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான கூடுதல் விவரங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.
EPFO கணக்கு
தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் அனைத்து சேமிப்புகளிலும் மிக சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் PF கணக்கில் வைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு வட்டி கொடுக்கப்படுவதுடன் சில சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் PF கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கிடைக்கும் சேமிப்பு மற்றும் வட்டி கணக்குகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வரி விதிக்கப்படும் என மத்திய அமைச்சகம் அறிவித்திருந்தது.
கல்லூரி மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை – நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்!
அதாவது PF கணக்கில் ரூ.2,50,000 ஐ விட அதிகமான சேமிப்பு தொகை இருந்தால் அதற்கு வட்டி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இருந்தாலும், PF கணக்கு பயனர் வருங்கால வைப்பு நிதிக்கு மட்டுமே பங்களிப்பு செய்தால் அந்த வரம்பு ரூ .2,50,000 முதல் ரூ .5,00,000 ஆக அதிகரிக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
அதன் கீழ் இனி வருங்கால வைப்பு நிதி கணக்குகள், வரிக்கு உட்பட்டது, வரி விலக்கு என 2 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக CBDT வெளியிட்ட அறிவிப்பு எண் 95/2021-ல் விதிமுறை 9Dன் படி வரி செலுத்தப்படாத, வரிக்குட்பட்ட கணக்குகளை தனித்தனியாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது எந்த வகையிலான கணக்குகளுக்கு வரி விதிக்கப்படும் என்பது கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,
EPF தொகையில் விதிக்கப்படும் வரி:
EPF கணக்கில் ரூ.10 லட்சம் வைத்திருக்கும் ஒரு பயனர் வருட பங்காக ரூ.4 லட்சத்தை அவருடைய பங்களிப்பு மற்றும் அவருடைய நிறுவனத்தின் பங்களிப்பாக அளிக்கிறார் என்றால் அந்த கணக்குக்கு வரி விதிக்கப்படும்.
வரியை செலுத்த:
இப்போது EPF பயனர்களிடையே வரி செலுத்துவதில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதாவது EPF கணக்கில் நிலுவை தொகையை செலுத்தும் ஒவ்வொரு நபருக்கும் ரூ .50,000க்கு அதிகமாக இருந்தால் அதற்கு வரி விதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
வரியை சேமிக்க:
EPF பயனர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வரம்பை மீறி பங்களிப்பு செய்வது குறித்தும், அதிகப்படியான பங்களிப்பு வரி விதிப்பின் அடிப்படையில் முதலீட்டுத் திட்டத்தை மதிப்பீடு செய்வது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். குறிப்பாக முதலீடு செய்வதற்கு முன்பு பயனர்கள் மாற்றுத் திட்டங்கள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.