15 ஆண்டு நிறைவு விழா சலுகையாக கட்டண குறைப்பு – இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களது 15 ஆண்டு நிறைவு விழா சலுகையாக பயணிகளுக்கான சேவைகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது.
கட்டண சலுகை:
இண்டிகோ இந்தியாவின் அரியான மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை இயக்குகிறது. இந்தியாவின் குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். இந்த நிறுவனம் மக்களுக்கான சேவையை தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
இதனால் பயணிகளுக்கு சிறப்பு கட்டண சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, அடிப்படை விலை ரூ.915 லிருந்து ஆரம்பிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காண கட்டணம் கொண்ட பயணச் சீட்டை ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை விற்க முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் சாமானிய மக்கள் எளிமையாக விமான பயணங்களை மேற்கொள்ள உதவிய இருக்கும். இந்த பயணச் சீட்டை செப்டம்பர் 1 – மார்ச் 26, 2022 க்குள்ளாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.
TN Job “FB Group” Join Now
இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா அவர்கள் இது குறித்து, விமானப் போக்குவரத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து சேவையை வழங்கி வந்ததற்காக பெருமை அடையும் இந்நேரத்தில் இண்டிகோவின் சிக்கலான காலகட்டத்தில் கூட உறுதுணையாக இருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இச்சலுகையை அறிவித்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 67 உள்நாட்டு பகுதிகளுக்கும் , 27 வெளிநாட்டு பகுதிகளுக்கும் தினமும் 1000 பயணங்களை மேற்கொள்வதற்கு இண்டிகோவிற்கு சொந்தமாக 270 விமானங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.