மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
தமிழகத்தில் அங்கங்கே ஏற்படும் மின்வெட்டுகளை குறைப்பதற்கு பராமரிப்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாளை வியாழக்கிழமை மதுரையில் கே.புதூர் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை காணப்படும் என செயற்பொறியாளர் ஜி.மலர்விழி கூறியுள்ளார். மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அதிகமாக மின்தடை ஏற்படுவதன் காரணமாக பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பராமரிப்பு நடைபெறும் இடங்களில் நாளை காலை 9 மணி மணி முதல் மாலை 5 மணி வரை முழு மின்தடை ஏற்படும். மதுரை கே.புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படும் என மின்தடை ஏற்படும் பகுதிகளையும் பட்டியலிட்டு வழங்கியுள்ளனர். நாளை மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் குறித்த விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 வரை கட்டுப்பாட்டு நடவடிக்கை நீட்டிப்பு – சண்டிகர் அரசு உத்தரவு!
மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் செயற்பொறியாளர் ஜி.மலர்விழி மின்தடை குறித்த அறிவிப்பினை முன்னதாகவே கூறியுள்ளார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் தேவையானவற்றை முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மின்தடை ஏற்படும் பகுதிகள் கோகலே சாலை, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் தெரு, அப்துல் ஹபார்கான் சாலை, பழைய அக்ரகார தெரு, சப்பானி கோவில் தெரு,சரோஜினி தெரு,டோக் பெருமாட்டி கல்லூரி சாலை,ராமமூர்த்தி சாலை,கமலா 2வது தெரு,காமராஜர் நகர் 2வது தெரு முதல் 4வது வரை, பாரதி உலா சாலை, ஜவஹர் சாலை, வல்லபாய் தெரு, பெசன்ட் சாலை, ஜவஹர் புறம், ஆத்திகுளம்,குறிஞ்சி நகர், கனகவேல் நகர், பாலமந்திரம் ஒரு பகுதி, பிடிஆர் மஹால்,எச்.ஏ.கான் சாலை, ஆயுதப்படை குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனி, டி.ஆர்.ஓ காலனி, புதூர் வண்டிப்பாதை ரத்தினசாமி நாடார் சாலை, புது நத்தம் சாலையில் ஒரு பகுதி ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும்.