இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவு – சென்செக்ஸ் புள்ளிகள் 400க்கு மேல் உயர்வு!!
இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தை வணிகம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் 400க்கு மேல் உயர்ந்து நிறைவு பெற்றுள்ளது.
பங்குச்சந்தை முடிவு:
இன்றைய மும்பை பங்குச்சந்தை வணிகத்தின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்ந்து ஏற்றத்துடன் முடிந்துள்ளது. அதாவது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424.04 புள்ளிகள் உயர்ந்து, 48,677.55 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. இது இன்றைய மொத்த வர்த்தகத்தில் 0.88 சதவீத உயர்வாகும்.
TN Job “FB Group” Join Now
இதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121.35 புள்ளிகள் உயர்ந்து 14,617.85 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்துள்ளது. இது இன்றைய மொத்த வர்த்தகத்தில் 0.84 சதவீதம் உயர்வாகும். மேலும் மும்பை பங்குச்சந்தை வணிகத்தின் குறியீடான சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 நிறுவனத்தின் தர பங்குகளில் 27 நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளன.
தமிழக மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
மீதமுள்ள 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டும் சற்று சரிவை எட்டியுள்ளது. இதில் உயர்வை அடைந்த 27 நிறுவனத்தின் பங்குகளில் சன் பார்மா, ஆக்சிஸ் வங்கிகளும் அடங்கும். பங்குச்சந்தையில் அதிகபட்சமாக சன் பார்மா நிறுவனம் 5.95 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 2.41 சதவீதமும், இண்டஸ் இந்த் வங்கி 2.33 சதவீதமும், கோட்டாக் வங்கி 2.20 சதவீதமும் உயர்ந்துள்ளது.