ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி – இந்திய ரூபாய் மதிப்பில் திடீர் சரிவு! தீவிரமடையும் தாக்குதல்!
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் பதற்றத்தால், பங்குச் சந்தைகளும் கடும் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு:
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்கல் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் தொடங்கியது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான பதற்றம் மக்கள் மனதில் பெரும் ஆழ்ந்த வேதனையை உருவாக்கியுள்ளன. உக்ரைனின், கார்கிவ் நகரில் நேற்று காலை ரஷ்ய ராணுவத்தினர் முழுமையாக நுழைந்தனர். இருப்பினும் உக்ரைன் அரசு மக்களிடம் ஆயுதங்களை வழங்கியுள்ளதால், ரஷ்ய படைகள் மீது வீட்டில் இருந்தபடியே உக்ரைனால் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ரஷ்யா, உக்காரனை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு – புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்!
அப்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா சொல்வது போல் பெலராஸில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த ரஷ்யாவின் நெருக்கடி காரணமாக பல ஆயிரம் மக்கள் வீட்டு பாதாள அறைகளிலும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பதுங்கியுள்ளனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக உக்ரைன் தலைநகர் கீவ்வில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ரஷ்யா உக்ரைன் போர் தாக்குதலால் ,அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் சரிந்து ரூ.75.73 உலக நிதி சந்தைகளில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது . இன்று வாரத்தின் முதல் வணிக நாளான சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து 55,098 புள்ளியில் வர்த்தகம் நடைபெறுகிறது. மேலும் இந்திய பங்குச் சந்தைகளில் திடீர் வீழ்ச்சி காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திடீரென தங்கள் முதலீடுகளை நிறுத்தியது மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.