இந்தியன் ரயில்வே துறையின் செயல்பாட்டுத் திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியன் ரயில்வே:
இந்திய ரயில்வே துறையின் செயல்பாட்டுத் திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டது. அதன்படி, தனியாக போர்டலை உருவாக்கி ரயில்வே துறையில் பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க விருப்பம் இருந்தால் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்திய ரயில்வேயின் https://innovation.indianrailways.gov.in/என்கிற வலைதளத்தின் மூலமாக மொத்தமாக 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்வாறு, பதிவு செய்யபட்ட நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய ரயில்வே அதன் தரம், நம்பகத்தன்மை மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவுள்ளது.