கியூபா நாட்டில் பெட்ரோல் விலை 132 காசுகளாக உயரும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது முந்தைய பணத்தை விட ஐந்து மடங்கு அதிகரிப்பாகும்.
பெட்ரோல் விலை
கியூபா நாட்டில் ஏற்பட்டுள்ள பண பற்றாக்குறையை போக்க அரசு திடீர் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்க முற்படும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பெட்ரோல் விலையை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் வழக்கமாக 25 பைசாவில் (20 அமெரிக்க சென்ட்) இருந்து 132 காசுகளாக உயரும், அதே சமயம் பிரீமியம் பெட்ரோலின் விலை 30ல் இருந்து 156 காசுகளாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. அந்த நாட்டில் 11 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் 1990 களில் சோவியத் முகாமின் சரிவுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் காரணமாகவும், சமீபத்தில் அமெரிக்காவின் தடைகள் காரணமாகவும், பொருளாதாரத்தின் கட்டமைப்பு காரணமாகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.