இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி – ஐ.நா.பொருளாதார கண்காணிப்பு தலைவர் வெளியிட்ட கருத்து!
உலக பொருளாதார சூழல் மற்றும் பலன்கள் குறித்த அறிக்கையை சர்வதேச பொருளாதார கண்காணிப்பு கிளைகளின் தலைவர் வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர் இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருக்கும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம்:
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பேரிடர் காரணமாக பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், ரூபாய் மதிப்பிழப்பு போன்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஐ.நா அமைப்பின் பொருளாதார கண்காணிப்பு கிளையின் தலைவர் உலக பொருளாதார சூழல் மற்றும் பலன்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அப்போது இந்தியா குறித்து பேசிய அவர், நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.8 என்ற அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்திய பொருளாதார வளர்ச்சி 2023 ம் ஆண்டில் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.4 விகிதம் சரிந்துள்ளது.
ஜனவரி 28ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட சண்டிகர் அரசு!
இந்தியாவில் கடந்த ஆண்டை விட பணவீக்க நெருக்கடி மற்றும் இறக்குமதி சார்ந்த செலவுகள் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த 3 காரணிகளால் இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் என்றும் ஐ.நா.பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.