ஜனவரி 28ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட சண்டிகர் அரசு!

0
ஜனவரி 28ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை - அறிவிப்பை வெளியிட்ட சண்டிகர் அரசு!
ஜனவரி 28ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை - அறிவிப்பை வெளியிட்ட சண்டிகர் அரசு!
ஜனவரி 28ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட சண்டிகர் அரசு!

சண்டிகரில் குடியரசு தின விழாவானது பரேட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்டிகரின் நிர்வாக ஆலோசகர் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை

நாட்டில் கடந்த மாதம் கடுமையான குளிர் நிலவுவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இந்த கடுமையான பனிப்பொழிவு ஜனவரி மாதம் வரை நிலவியதால் விடுமுறை நாட்கள் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதில் குறிப்பாக சண்டிகரில் கடுமையான குளிர் காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அரசு வேலைக்காக காத்திருந்த இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பீகார் அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்!

அதன்படி 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 14ஆம் தேதி வரையிலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜனவரி 9ம் தேதி வரையிலும் விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நாட்டின் 74வது குடியரசு தின விழாவானது பரேட் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்டிகரின் நிர்வாக ஆலோசகர், சண்டிகரில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!