இந்தியன் வங்கியில் 300+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
இந்தியன் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Manager, Manager, Assistant Manager, Chief Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Manager, Manager, Assistant Manager, Chief Manager பணிகளுக்கு என்று மொத்தமாக 312 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் CA / ICWA / CS / Graduate / Post Graduate ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
- இப்பணிகளில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.89,890/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏழுத்து தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
- SC / ST/ PEBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.