இந்தியாவில் அக்.18 முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் – விமான போக்குவரத்து அமைச்சகம்!
இந்தியாவில் அக்டோபர் 18 ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்கலாம் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டுப்பாடுகள் நீக்கம் :
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கிய கொரோனா இரண்டாம் அலையால் அனைத்து மாநிலங்களும் நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. முதல் அலையில் இல்லாத அளவு பாதிப்பு எண்ணிக்கை இரண்டாம் அலையும் உயர்ந்தது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்தது. இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்தது. இந்த நிலையில் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – ஒரேயொரு ஓட்டு பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வி!
இதன் பேரில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. மேலும் பேருந்து சேவை, பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முதல்கட்டமாக உள்நாட்டு விமான சேவையில் நாடு முழுவதும் 870 விமானங்கள் இயக்கப்பட்டது. அதன் பின் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் திறன் 72.5 சதவீதத்திலிருந்து 85 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட்டது.
IRCTC பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாதத்தில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு!
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான பயணம் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயணம் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. விமான நிறுவனங்கள் எந்த தடையும் இல்லாமல் விமானங்களை இயக்கலாம். எனினும் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.