IND vs ENG 2வது டெஸ்ட் போட்டி – அதிகளவு ரன்களை விளாசிய ரோஹித் சர்மா! குவியும் வாழ்த்துக்கள்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இடையே நடைபெற்று வரும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா முதன் முறையாக தனது அதிகபட்ச ரன்களை வெளிநாட்டு தொடரில் பதிவு செய்துள்ளார்.
ரோஹித் சர்மா
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து நேற்று (ஆகஸ்ட் 12) துவங்கிய 2 ஆவது டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தனது பேட்டிங் திறமையை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். பொதுவாக வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் காணப்படும் வீரர்களின் திறனை பொறுத்து தான் அவர்களது திறமை மதிப்பிடப்படும்.
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – பட்ஜெட்டில் அறிவிப்பு!
அந்த வகையில் ரோஹித் சர்மா முதன் முதலாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 83 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். ஏனென்றால் இதுவரை கலந்து கொண்ட வெளிநாட்டு தொடரில் ரோஹித் சர்மா எடுத்த அதிகளவு ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 79 ரன்கள் பெற்றிருந்ததே அவரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற 2 ஆவது நாள் டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் கூட்டணி 126 ரன்கள் சேர்த்து முன்னிலை வகித்தது. இதையடுத்து 83 ரன்கள் பெற்ற ரோஹித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சனிடன் வீழ்ந்தார்.
TN Job “FB Group” Join Now
இப்போட்டியில் ரோஹித் சர்மா சதமடிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். எனினும் அவர் தனது அதிகபட்ச ஸ்கோரை இங்கிலாந்தில் பதிவு செய்துள்ளது பாராட்டுக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. வெளிநாட்டில் ரோஹித் சர்மா பெற்ற அதிகபட்ச ஸ்கோர் பட்டியலை பொருத்தளவு 2021ல் இங்கிலாந்துக்கு எதிராக 83 ரன்கள், 2018 ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 63 ரன்கள், 2015ல் இலங்கைக்கு எதிராக 79 ரன்கள், 2015ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 ரன்கள், 2014 ல் நியூசிலாந்துக்கு எதிராக 72 ரன்கள் எடுத்திருந்தது கூடுதல் தகவல்.