இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா பரவல் – கடந்த 24 மணிநேரத்தில் 918 பேருக்கு பாதிப்பு உறுதி!!
நாடு முழுவதும் சுமார் 918 பேர் இன்று (மார்ச் 20) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், 400க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பரவல்
கடந்த ஒரு சில வாரங்களாக, இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசாங்கம், அதிகளவு பாதிப்புகள் பதிவு செய்யப்படும் மாநிலங்கள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், மக்கள் மீண்டும் முகக்கவசங்களை அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 918 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
பயனர்கள் கவனத்திற்கு – மைக்ரோசாப்ட்டின் புதிய பிளே ஸ்டோர் வசதி!!
அதாவது, 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் அதில் 918 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் அடிப்படையில், கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடி 41 லட்சத்து 51,180 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 6350 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், இன்று ஒரே நாளில் 479 பேர் சிகிச்சையில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.