நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 7) வங்கிகளுக்கு விடுமுறை – காரணம் இதுவா? பொதுமக்கள் கவனத்திற்கு!
நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் நாளை (ஏப்ரல் 7) புனித வெள்ளி காரணமாக மூடப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
வங்கிகள் விடுமுறை
நாடு முழுவதும் இயங்கி வரும் வங்கிகளில் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் விடுமுறை நாள்காட்டியின் படி விடுமுறை விடப்படும். இந்நிலையில் நாளை (ஏப்ரல் 7) புனித வெள்ளி தினம் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் வங்கி சேவைகளை செய்ய நினைக்கும் மக்கள் முன்கூட்டியே செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் 12 ஆயிரம் பெண்களுக்கு ரூ.1.56 கோடி ஒதுக்கீடு – எதற்காக தெரியுமா?
மேலும் ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன் படி
- ஏப்ரல் 1 – வங்கிகள் தங்கள் வருடாந்திர கணக்குகளை மூடப்படும்
- ஏப்ரல் 4 – மகாவீர் ஜெயந்தி
- ஏப்ரல் 5 பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள்
- ஏப்ரல் 7 புனித வெள்ளி
- ஏப்ரல் 14 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ தமிழ் புத்தாண்டு
- ஏப்ரல் 15 – வங்காள புத்தாண்டு தினம்
- ஏப்ரல் 18 – ஷப்-ல்-கத்ர்
- ஏப்ரல் 22 – ரம்ஜான் ஈத்
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates