10ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் தாள் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்களின் மனநிலை என்ன?
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது, முதல் நாளான இன்று தமிழ் தேர்வை எழுதியுள்ள மாணவர்களின் மனநிலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிவடைந்த நிலையில், இன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 7) வங்கிகளுக்கு விடுமுறை – காரணம் இதுவா? பொதுமக்கள் கவனத்திற்கு!
மேலும் தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்கு 55,000 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியிலும் மற்றும் 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகளும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொதுத்தேர்வின் முதல் நாளான இன்று தமிழ் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுதிய மாணவர்கள் கூறியதாவது, தமிழ் தேர்வானது எளிதாக இருந்ததாகவும், தாங்கள் படித்த பாடங்கள் தான் தேர்வில் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து, கடினமாக கேட்கப்பட்ட 2 மதிப்பெண் கேள்வி ஒன்றை, சாய்ஸ்-ல் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளனர். அத்துடன் இத்தேர்வை திருப்தியாக எழுதி இருப்பதாகவும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download