IND vs ENG 4வது டெஸ்ட் – மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்து பந்துவீச முயன்ற ஜார்வோ 69 கைது!
இந்தியா – இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி 2வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஓவல் மைதானத்துக்குள் நுழைந்து பந்துவீச முயன்ற யூடியூபர் டேனியல் ஜார்விஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜார்வோ கைது:
இந்தியா – இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்று (செப்.3) இங்கிலாந்து எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக விளையாடியுள்ளது. இந்நிலையில் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் டேனியல் ஜார்விஸ் மைதானத்திற்குள் நுழைந்து ஏதாவது இடையூறு செய்து வருகிறார். அவரது நோக்கம் வீரர்களுக்கு தொந்தரவு கொடுப்பது அல்ல, வீரர்களுக்கு வாழ்த்துச் சொல்வது, அவர்களுடன் உரையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது தான்.
Tokyo Paralympics பேட்மிண்டன் – இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி! பைனலில் பிரமோத் பகத்!
இதன் மூலம் அவர் யூடூப் சேனலிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எண்ணம். அவரது யூடூப் சேனலில் 1.23 லட்சம் பேர் பாலோவர்ஸ் உள்ளனர். இவர் கனடாவில் பிறந்தாலும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் மைதானத்துக்குள் நுழைந்து ஏதாவது இடையூறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். நடந்து முடிந்த 3 போட்டிகளில் ஒரு முறை இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து கொண்டு களமிறங்கி பீல்டிங் செட் செய்ய ஜார்வோ முயற்சி செய்தார்.
மற்றொரு முறை இந்திய பேட்ஸ்மேன் போன்று பேட், ஹெல்மெட், ஆடை, முகக்கவசம் அணிந்து களமிறங்கி உள்ளார். கடந்த 3 போட்டிகளிலும் ஜார்வோவின் சேட்டை தாங்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் 4வது போட்டியில் அத்துமீறியதால் போலீஸார் அவரை கைது செய்தனர். ஏற்கனவே இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது களத்தில் பேர்ஸ்டோ, போப் இருந்தனர். போப் பேட் செய்ய முயன்றபோது, திடீரென மைதானத்துக்குள் நுழைந்த ஜார்வோ போப்பிற்கு பந்துவீச முயன்று பேர்ஸ்டோ மீது அவர் மோதினார். அதனால் பேர்ஸ்டோவுக்கும், ஜார்வோவுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து நடுவர் தடுத்து நிறுத்தினார்.
தாலிபான் அரசின் தேசிய கொடி, தேசிய கீதம், அரசு கோட்பாடு விரைவில் வெளியீடு – முக்கிய அறிவிப்பு!
அதன் பின்னர் காவலர்கள் அவரை அழைத்து சென்றனர். இதனால் ஆட்டம் 5 நிமிடம் நிறுத்தப்பட்டது. அவர் மைதானத்திற்குள் செய்த ரகளை பார்வையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்தது. இருந்தாலும் போட்டி நடைபெறும் போது அவர் நடவடிக்கை வீரர்களுக்கு தொந்தரவாக இருப்பதால் ஜார்வோவை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர். அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டி இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது.