Tokyo Paralympics பேட்மிண்டன் – இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி! பைனலில் பிரமோத் பகத்!
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதன் மூலம், இந்தியாவுக்கான பாராலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
பேட்மிண்டன் போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி சார்பில் 54 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு, சுமார் 13 பதக்கங்களை வாங்கி குவித்துள்ளனர். அந்த வகையில் போட்டிகள் துவங்கி 11 ஆவது நாளான நேற்றும் (செப்டம்பர் 3) இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா மொத்தம் 13 பதக்கங்களை பெற்று பாராலிம்பிக் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் 37 ஆவது இடத்தை வகிக்கிறது.
Tokyo Paralympics வில்வித்தை – வெண்கலம் வென்றார் இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங்!
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 4) துவங்கியுள்ள 12 ஆம் நாள் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் பிரமோத் பகத், இறுதி சுற்றுக்கு முன்னேறி இந்தியாவுக்கான மற்றுமொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் SL 3 பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரமோத் பகத், 21-11, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டைசுகி புஜிகராவை வீழ்த்தியுள்ளார்.
தமிழ் வழியில் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அரசுக்கு கோரிக்கை!
இதன் மூலம் பிரமோத் பகத் பதக்கத்துக்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடன் பாராலிம்பிக் பேட்மிண்டன் வரலாற்றில், முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு செல்லும் இந்திய வீரர் என்ற பெருமையையும் பிரமோத் பகத் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 11 நாட்களாக நடைபெற்று வரும் இப்போட்டிகள் நாளையுடன் (செப்டம்பர் 5) முடிவடைகிறது.