தாலிபான் அரசின் தேசிய கொடி, தேசிய கீதம், அரசு கோட்பாடு விரைவில் வெளியீடு – முக்கிய அறிவிப்பு!
தாலிபான்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், அவர்களின் அரசு கோட்பாடு, தேசிய கீதம், தேசிய கொடி போன்றவை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அரசு கோட்பாடு:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க நேட்டோ கூட்டுப் படைகள் ஆப்கனில் தலிபான்களை எதிர்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு தலிபான்களின் ஆதிக்கம் சற்று குறைந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதில் இருந்து அமெரிக்க வீரர்களை ஆப்கானில் இருந்து படிப்படியாக வெளியேற்ற முடிவு செய்தார். தாலிபான்களுடன் ஒப்பந்த அடிப்படையில் தாங்கள் ஆப்கனை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்தார்.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம் – திருமாவளவன் கோரிக்கை!
ஆகஸ்ட் 31ம் தேதி அன்று அமெரிக்க படையினர் முழுவதுமாக தங்களின் ராணுவ தளவாடங்களை செயலிழக்க செய்து விட்டு ஆப்கனை விட்டு வெளியேறினர். மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் குடிமக்களில் தாலிபான்களின் ஆட்சியை விரும்பாதவர்கள் உலகின் பல நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர். விரைவில், தாலிபான்கள் அதிகாரபூர்வமாக ஆட்சி அமைக்க உள்ளனர். ஆப்கனில் ஈரானை போல் ‘சுப்ரீம் லீடர்’ நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுப்ரீம் லீடரே நாட்டின் அனைத்து துறைகளுக்கும் உயரிய தலைவராக செயல்படுவர்.
TN Job “FB Group” Join Now
இந்த பதவிக்கு தலிபான் இயக்கத்தின் உச்ச அதிகாரம் பெற்ற முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாதாவை நியமிக்க தாலிபான்கள் முடிவு செய்துள்ளனர். தாலிபான்கள் ஏற்கனவே காவல்படை உயரதிகாரிகள், மாகாண கவர்னர்கள், இதர அதிகாரிகள் ஆகியோரை நியமித்து விட்டனர். மேலும், விரைவில் தாலிபான் அரசின் தேசிய கீதம், தேசிய கொடி, அரசு கோட்பாடு போன்றவை வெளியிட இருப்பதாக தாலிபான் செய்தி தொடர்பு அமைப்பான ஹிஸ்புல் முஜாஹித் தெரிவித்துள்ளது.