சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம்- திருமாவளவன் கோரிக்கை!
2009, 2010 ம் ஆண்டுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இன்னும் பணி நியமனம் வழங்கப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஆசிரியர் பணி நியமனம்:
தமிழகத்தில் கடந்த 2009, 2010ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின் போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு இதுவரையில் பணி நியமன ஆணை கிடைக்காமல் 1258 பட்டதாரி தமிழாசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்களும் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது, இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இரவில் தனியாக பயணிக்கும் பெண்களின் கவனத்திற்கு – புதுவை அரசின் அதிரடி முடிவு!
அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியின் போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு மூப்பு முறையில் நடைபெற்று வந்தது. 2009, 2010 ஆம் ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அப்போது சான்றிதழ் சரிபார்க்கும் படியினை முடித்து விட்ட 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1258 பட்டதாரி தமிழாசிரியர்கள் இன்னும் பணிநியமனம் செய்யப்படவில்லை. பின்னர், அதிமுக அரசு ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதி தேர்வு முறையினை அமல்படுத்தினார்.
TN Job “FB Group” Join Now
இதனால் இந்த ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தங்களுக்கு விலக்கு பெற்றனர். இருப்பினும், இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு பணி நியமனம் வளநாக்குவது குறித்து அரசு அறிவிக்கவில்லை. இதனால் இவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், பணி நியமன ஆணையினை வழங்கி அவர்களுக்கு உதவி செய்திட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த பணி நியமனம் தொடர்பாக இவர் இதற்கு முன்னரும் அரசுக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.