கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடிகளை எறிந்த ரசிகர்கள், இந்திய ஜெர்சியுடன் மைதானத்திற்குள் நுழைந்த நபர்!

0
கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடிகளை எறிந்த ரசிகர்கள், இந்திய ஜெர்சியுடன் மைதானத்திற்குள் நுழைந்த நபர்!
கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடிகளை எறிந்த ரசிகர்கள், இந்திய ஜெர்சியுடன் மைதானத்திற்குள் நுழைந்த நபர்!
கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடிகளை எறிந்த ரசிகர்கள், இந்திய ஜெர்சியுடன் மைதானத்திற்குள் நுழைந்த நபர்!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர் கேஎல் ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர்கள் பாட்டில் மூடிகளை எறிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்:

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. தற்போது 2வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார். ரோஹித் சர்மா 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் விளாச வலுவான நிலையில் உள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ பரினா வயிற்றில் குழந்தையுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

128 ஓவர்கள் முடிவில் 391 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணி இழந்துள்ளது. இதன் மூலம் 27 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனிடையே இங்கிலாந்து அணி பேட்டிங்கின் போது கேஎல் ராகுல் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். முஹம்மது சமி வீசிய 69 ஓவரின் போது இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடிகளை (கார்க்) வீசினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கேப்டன் விராட் கோஹ்லி அதனை மைதானத்தில் இருந்து மீண்டும் வெளியே வீசும் படி ராகுலுக்கு சிக்னல் காட்டினார்.

சுதந்திர தின விழா சிறப்பு விருதுகள் 2021 முழு விபரம் – முதல்வர் முக ஸ்டாலின் கௌரவம்!

மேலும் போட்டி நடுவர்களிடம் இது தொடர்பாக இந்திய வீரர்கள் முறையிட்டனர். ஏற்கனவே இங்கிலாந்து ரசிகர் ஒருவர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கேஎல் ராகுல் மீது கார்க் வீசப்பட்ட விவகாரம் என அனைத்தும் கேப்டன் விராட் கோஹ்லியை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்று கூறலாம். இதனால் போட்டி முடிவடையும் வரை கேப்டன் விராட் கோஹ்லி முகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!