தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முக்கிய கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் மத்திய அரசை போலவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உயர்த்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை எழுதி உள்ளார்.

தமிழக அரசுக்கு அறிக்கை:

தமிழகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது திராவிட முன்னேற்ற கழகம். மேலும் அவர்கள் பல தேர்தல் வாக்கு உறுதியையும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தங்களது தேர்தல் வாக்கு உறுதிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் வரும் படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.

TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு – தேர்வு வாரியம் வெளியீடு!

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் இதனை நடைமுறைப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மறுபரிசீலனை செய்து 1.1.2020 முதல் 21 சதவீதம், 1.7.2020 முதல் 25 சதவீதம்,1.1.2021 முதல் 28 சதவீதம், 1.7.2021 முதல் 31 சதவீதம் என உயர்த்தி, அதன் பணப் பயனை 1.7.2021 முதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 34 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

அதனை தொடர்ந்து, தற்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து ஒரு முக்கிய அறிக்கையை தெரிவித்து உள்ளனர். அவர் கூறியதாவது, மத்திய அரசை தொடர்ந்து, தமிழகத்திலும் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து, அரசின் வருமானமும் அதிகரித்துள்ள நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்புவித்து பணமாக்கும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளது போல், அகவிலைப்படி உயர்வையாவது 1.1.2022 முதல் 34 விழுக்காடாக உயர்த்தி, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1.1.2022 முதல் 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!