சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!
சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த கல்வியாண்டினை விட 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மாணவர் சேர்க்கை:
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய் பரவலின் எதிரொலியாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையறையின்றி மூடப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்ததால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்று வந்தனர்.
தமிழகத்தில் எதெற்கெல்லாம் இ-பாஸ் அவசியம் – தவறாமல் படிங்க!
நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தாலும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பலர் வேலை இழந்த காரணத்தால் தங்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க பலர் முன் வந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 14 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகள் மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை ஆரம்பமானது. கடந்த கல்வி ஆண்டினை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 33 சதவீதம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டு மட்டும் 27,843 பேர் புதிதாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதிலும் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் 6,897 பேர் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.