தமிழகத்தில் இன்று (செப்.08) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் மூக்குடி என்னும் கிராமத்தில் வீரமாகாளி அம்மன் கோவிலானது 300 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தது. இக்கோவிலில் நாளை குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் பொதுவாக மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவில் பொது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மூக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள வீரமாகாளி அம்மன் கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு வருகை புரிந்தால் திருமண ஆகாதவர்களுக்கு திருமணமாகும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் பக்தர்களிடம் பல்வேறு தோஷங்கள் நீங்கிடவும் இக்கோவிலுக்கு வருகை புரிவது வழக்கமாகும். அதாவது நாகதோஷம், புத்திரதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று வீரமாகாளி அம்மன் கோயிலில் குடமுழுக்கு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் இதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையடுத்து இந்த குடமுழுக்கு விழாவில் உள்ளூரில் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஈஸ்வரி பேசியதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, ஜெனி சொன்ன நல்ல செய்தி – இன்றைய எபிசோட்!
இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இன்று (செப்.08) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையானது மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். அத்துடன் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் மற்றொரு தினம் அன்று மாவட்டத்தில் வேலை நாளாக நடத்தப்படும் என கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்