மக்களே எச்சரிக்கை.. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு!

0
மக்களே எச்சரிக்கை.. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் - அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு!
மக்களே எச்சரிக்கை.. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் - அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு!
மக்களே எச்சரிக்கை.. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (அக். 29) முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நவரம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை:

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான சித்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவ மழை காலதாமதமாக தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் இன்று (அக். 29) முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

ஒரு ஆண்டில் தமிழகத்தில் பெய்யும் மொத்த மழையின் அளவில் 48 சதவிகிதம் மழை வடகிழக்கு பருவ மழையில் தான் பெய்யக் கூடும். அதில் குறிப்பாக கடலோர பகுதிகளில் 60 சதவிகித மழையும், மற்ற பகுதிகளில் 40 முதல் 50 சதவிகிதம் வரை மழை கிடைக்கும். மேலும் தற்போது தமிழகத்தின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி – தமிழக அரசு திட்டம்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இன்று (அக். 29) கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த பருவ மழை தீவிரமடைந்து நவம்பர் 1 மற்றும் 3 தேதிகளில் அதி தீவிர கனமழையாக மாறும். மேலும் நவரம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழ் நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!