தமிழகத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி – தமிழக அரசு திட்டம்!

0
தமிழகத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக அரசு திட்டம்!
தமிழகத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக அரசு திட்டம்!
தமிழகத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி – தமிழக அரசு திட்டம்!

சென்னையில் வரும் 2023ம் ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கண்காட்சியில் புத்தக ஆசிரியர்கள் சந்திப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புத்தக கண்காட்சி:

சிறந்த கருத்துகள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அவ்வப்போது புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சிகள் மூலம் மக்களுக்கு கிடைக்க பெறாத அரிய புத்தகங்கள் எளிதில் கிடைத்து விடுகிறது. மேலும் பல எழுத்தாளர்கள் தங்களது கண்காட்சி மூலம் படைப்புகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர். இத்தகைய பயனுள்ள புத்தக கண்காட்சி தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

Exams Daily Mobile App Download

வரும் 2023ம் ஆண்டு சென்னை மாநகரில் சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் வரை பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து 3 நாட்கள் இந்த புத்தக கண்காட்சி புத்தக வாசிப்பாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கண்காட்சியுடன் சேர்த்து புத்தக ஆசிரியர்கள் சந்திப்பு, உரையாடல்கள் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் – காரணம் இது தான்!!

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக தமிழக அரசு கண்காட்சியின் போது உலகளாவிய மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘தமிழ் மற்றும் உலகளாவிய புத்தகம் வெளியீடு’ என்ற தலைப்பில் மாபெரும் மாநாட்டையும் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து மக்கள் மத்தியில் இந்த புத்தக கண்காட்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!