தமிழகத்தில் இனி மகளிர் கட்டணமில்லா பயணத்தில் குழப்பம் இல்லை – எளிய சேவை துவக்கம்!

0
தமிழகத்தில் இனி மகளிர் கட்டணமில்லா பயணத்தில் குழப்பம் இல்லை - எளிய சேவை துவக்கம்!
தமிழகத்தில் இனி மகளிர் கட்டணமில்லா பயணத்தில் குழப்பம் இல்லை - எளிய சேவை துவக்கம்!
தமிழகத்தில் இனி மகளிர் கட்டணமில்லா பயணத்தில் குழப்பம் இல்லை – எளிய சேவை துவக்கம்!

தமிழகத்தில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் தமிழக அரசு புது முயற்சியை கடந்த (ஆகஸ்ட். 6) முதல் மேற்கொண்டது. அதனை தொடர்ந்து போக்குவரத்து துறையும் தொடர் பணியை செயல்படுத்தி வருகிறது.

மகளிர் கட்டணமில்லா பயணம் :

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் கட்டணமில்லா பயணம் திட்டத்தை செயல்படுத்துவதாக கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, ஆட்சிக்கு வந்த கையோடு இந்த திட்டத்தை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக செயல்படுத்தினர். இத்திட்டம் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தமிழகத்தின் மிகப்பெரிய நிதி நெருக்கடி இருந்த சமயத்தில் மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்தாலும் இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 1,600 கோடி ரூபாய் போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்தது.

எனவே ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. இதனால் பெண் பயணியரின் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்து அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் சில பெண்கள் அவசரத்தில் சொகுசு பேருந்து அல்லது டீலக்ஸ் பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இதனால் சில பேருந்துகளில் நடத்துனர், பெண்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. ஆகவே இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்தின் நிறத்தை ‘பிங்க்’ நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை மாநில போக்குவரத்து துறை மேற்கொண்டது.

UGC- NET தேர்வர்கள் கவனத்திற்கு – தலைவர் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதன்படி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமில்லா பயணச் சலுகை பேருந்துகளுக்கு பிங்க் கலர் பூசப்பட்டு கடந்த (ஆகஸ்ட் .6) முதல் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது,பேருந்தின் இருபுறங்களில் மட்டும் பிங்க் பெயிண்ட் அடிக்கப்பட்டதை அடுத்து தற்போது முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு முதன்முதலாக சென்னையில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்களது தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், படிப்படியாக அனைத்து இலவச பேருந்துகளுக்கும் இந்த நிறம் பூசுவது தொடர்பான பரிசீலனை செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!