தமிழகத்தில் ஜூன் 8 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள்? எதற்கெல்லாம் அனுமதி!

2
தமிழகத்தில் ஜூன் 8 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள்? எதற்கெல்லாம் அனுமதி!
தமிழகத்தில் ஜூன் 8 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள்? எதற்கெல்லாம் அனுமதி!
தமிழகத்தில் ஜூன் 8 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள்? எதற்கெல்லாம் அனுமதி!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதியுடன் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்ற நிலையில் 7ம் தேதிக்கு பின்பு எதெற்கெல்லாம் அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தளர்வுகளற்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி காலை 6 மணியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இத்தனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி பாதிக்கு குறைந்து வரும் மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதிப்பு அதிகமாக காணப்படும் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு வருகின்ற 7ம் தேதிக்கு பின்பு எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி – 45 நிறுவனங்கள் விருப்பம்!

ஊரடங்கு தளர்வுகள் (வாய்ப்பு):

  • ஜூன் 7ம் தேதிக்கு பின்பு பேருந்து போக்குவரத்து தவிர வாடகை டாக்சிகளில் மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதியளிக்க வாய்ப்பு.
  • மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் அவசியம் இல்லை.
  • ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் மேற்கொள்ள இ-பாஸ் முறை நீடிக்கும்.
  • தேநீர் கடைகள், உணவகங்கள் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்க வாய்ப்பு.
  • சென்னை மாநகரை பொறுத்த வரை சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி வழங்க வாய்ப்பு.
  • வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்க வாய்ப்பு.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. கோவை, சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஓண்டிப்புதூரில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ், அரசு பஸ் டெப்போ அருகில் உள்ள இடத்தில் ஒரு மினி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
    இதனால் ஓட்டுனர், நடத்துநர், பொது மக்கள் அனைவரும் பயன் பெறுவர்
    .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!