தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி – 45 நிறுவனங்கள் விருப்பம்!
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவற்றை தயாரிக்க 45 தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் அளவு கடந்த மாதம் உச்சக்கட்டத்தில் இருந்து, நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து அதை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதால் தட்டுப்பாடு ஏற்படும் நிலையை தவிர்க்க முடியவில்லை.
TN Job “FB Group” Join Now
இதனை தவிர்ப்பதற்காக தமிழகத்திலேயே கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ பொருட்கள், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் உற்பத்தி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை தயாரிப்பதற்கு தமிழக முதல்வர் முடிவு செய்தார். இதற்காக தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. மே 31ம் தேதி வரை இதற்கு அவகாசம் அளித்திருந்தது.
அஞ்சல் அலுவலகத்தில் தேசிய சேமிப்பு பத்திர திட்டம் – விரிவான விளக்கம்!!
அதன்படி, தமிழக அரசின் கிட்கோ என்று அழைக்கப்படும் தொழில்வளர்ச்சி கழகத்துடன் இணைந்து கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் உற்பத்தி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய 45 நிறுவனங்கள் விருப்ப மனு அளித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், தகுதி வாய்ந்த நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்று அரசு தரப்பு கூறியுள்ளது.
Nothing
I am