அஞ்சல் அலுவலகத்தில் தேசிய சேமிப்பு பத்திர திட்டம் – விரிவான விளக்கம்!!
வங்கிகளை போல அஞ்சலகங்களிலும் சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு அடிப்படையில் பயனாளர்களுக்கு வங்கிகளை விட அதிகளவு வட்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
சேமிப்பு திட்டங்கள்
தற்போது நிலவும் கொரோனா சூழலுக்கு மத்தியில் பலருக்கும் பணத்தேவைகள் ஏற்பட்டுள்ள நிலையில், சேமிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். அதே அளவு வட்டி விகிதம் அஞ்சல் வழியாக பணம் சேமிப்பவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அஞ்சலகங்களில் சிறந்த திட்டமாக தேசிய சேமிப்பு பத்திரம் (National savings certificate) செயல்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதாவது இந்த திட்டத்தின் மூலம் வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட்டை வழங்கும் வட்டியை விட அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனைத்து இந்தியர்களும் தகுதியுடையவர்கள் ஆவர். ஒருவர் இதன் கீழ் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும். தவிர 500 ரூபாய், 1000 ரூபாய், 5000 ரூபாய், 10000 ரூபாய் போன்ற மதிப்புகளிலும் சேமிப்பு பத்திரங்களை பெற்று கொள்ளலாம்.
ஜியோ (Jio) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
அந்த வகையில் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் பெற்றுக்கொள்ள முடியும். அதாவது 5 ஆண்டுகள் அடங்கிய முதிர்வு காலத்தில், ஆண்டுக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தவிர ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதமானது மத்திய நிதி அமைச்சகத்தால் திருத்தப்படலாம். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் 15 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் முடிவில் 20.85 லட்சம் வருவாய் கிடைக்கும்.