ஜியோ (Jio) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இம்மாத 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது ஜியோவின் 5 ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்:
இந்த 2021 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் ஜூன் மாதம் 24 ஆம் தேதி 2 மணிக்கு நடைபெறயுள்ளது. இது யூடியூப் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும். இது ஜியோ நிறுவனத்தின் 44வது ஆண்டு பொதுக் கூட்டமாகும். 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஜியோ 5ஜி சேவைகள் வெளிவரும் என்று அம்பானி ஒரு முறை கூறி இருந்தார். நிறுவனம் ஏற்கனவே தனது 5 ஜி சோதனைகளில் 1 ஜிபிபிஎஸ் வேகத்தை எட்டியுள்ளது. ஜியோ 5ஜி போன் மற்றும் ஜியோ 5ஜி சேவையுடன் சேர்த்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலை கொண்ட ஜியோ புக் லேப்டாப்பையும் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டு, இந்தியாவில் மலிவு விலையிலான ஜியோ 5ஜி போன் அறிமுகத்திற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்தது. வரவிருக்கும் ஜியோ 5 ஜி போன் ஆண்ட்ராய்டுக்கான ஃபோர்க் பதிப்பில் இயங்கும், இது நாட்டின் மிகவும் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.
மாவட்ட அளவிலான ஊரடங்கு தளர்வுகள் – மத்திய அரசு அனுமதி!!
இம்முறை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் ஆன முகேஷ் அம்பானி குறைந்த விலை கொண்ட ஜியோ 5ஜி போனையும், உடன் பட்ஜெட் விலை கொண்ட லேப்டாப் ஆக ஜியோபுக்கையும், எல்லாவற்றிற்கும் மேலாக ஜியோ 5ஜி சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற வெளியீட்டு தேதியையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஜியோபுக் குறைந்த விலை லேப்டாப் விவரங்கள் இணையத்தில் லீக் ஆனது.