தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் – இன்று முதல் அமல்!!
தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு நடைமுறையானது இன்று (ஜூன் 7) முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
இ-பதிவு கட்டாயம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்றுடன் (ஜூன் 7) முடியவிருந்த தளர்வில்லா முழு ஊரடங்கை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில், அத்தியாவசிய கடைகள் திறப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சார்பதிவாளர் உட்பட அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தளர்வுகளை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தும் படி அரசு வலியுறுத்தியுள்ளது. இது தவிர அத்தியாவசிய பணிகளுக்காக, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கடந்த ஆண்டு நடைமுறையில் இருந்த இ-பாஸ் நடைமுறையானது, இந்த ஆண்டு இ-பதிவு நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவம், இறப்பு போன்ற காரியங்களுக்காக மாவட்டத்துக்குள் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ‘இ-பதிவு’ ஆன்லைனில் அப்ளை செய்யும் எளிய வழிமுறைகள்!
இந்த இ-பதிவு நடைமுறையில், அத்தியாவசிய காரணங்களை கூறி பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும். அந்த வகையில் கடந்த 2 வாரங்களாக கடைப்பிடிக்கப்பட்ட தளர்வில்லா ஊரடங்கில் போக்குவரத்துக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 1 வார ஊரடங்கில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணம் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 14 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – +2 பொதுத்தேர்வு ரத்து!
அதே நேரத்தில் இந்த ஊரை சேர்ந்த மக்கள் காவல் துறையினரிடம் இருந்து உரிய ஆவணங்களை பெற்று பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இ-பதிவுடன் வாடகை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று (ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.