ஜூன் 14 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – +2 பொதுத்தேர்வு ரத்து!
ஹிமாச்சல் பிரதேசத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் மாநில அரசு ரத்து செய்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா பரவல் வீதம் முன்பை விட குறைந்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் கீழ் புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் முழு ஊரடங்கு உத்தரவை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் தற்போதுள்ள அனைத்து கட்டுப்பாடுகளுடன் ஜூன் 14 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர அம்மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் கொரோனா ஊரடங்கு உத்தரவை பொறுத்தவரை, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாபாக்கள், உணவகங்கள் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சலியின் குழந்தையை கொல்ல திட்டமிடும் வெண்பா – காப்பாற்றுவாரா அகிலன்?
கூடுதலாக ஹிமாச்சல் பிரதேசத்தில், இந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் + 2 தேர்வுகளை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அம்மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடுகளில் அவர்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில், சிறப்பு தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Work