இந்தியாவில் ஒரே நாளில் 10,725 பேருக்கு கொரோனா உறுதி – மத்திய அரசு ‘ஷாக்’ ரிப்போர்ட்!
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை காணலாம்.
கொரோனா பரவல்
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது கொரோனா தடுப்பூசி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றின் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 10,725 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,78,920 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனாவால் இன்று 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,27,488ஆக அதிகரித்துள்ளது. அதன்படி உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் 94,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் செப்.1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – வலுக்கும் எதிர்ப்புகள்!
Exams Daily Mobile App Download
இதே போல நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,57,385ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரே நாளில் 23,50,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,10,82,34,347 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்