தமிழகத்தில் செப்.1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – வலுக்கும் எதிர்ப்புகள்!
தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுங்கக்கட்டணம்:
தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்க்காக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நெடுஞ்சாலைகளில் மட்டுமே 50 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஏப்ரல் 1 ஆம் தேதி 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சுங்கச்சாவடிக்கு உட்பட்ட சாலைகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டாலும், இல்லையென்றாலும் கூட 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சுங்கச்சாவடி கட்டணத்தை வைத்து தான் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சாலைகளுக்கு நடுவே பெயிண்ட் அடிப்பது, சாலைகளில் ஒளிரும் விளக்குகளை பொருத்துவது, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, நகர்ப்புற விரிவு பகுதிகள், பாலங்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் உள்ள தெரு விளக்குகளுக்கு மின் கட்டணம் ஆகிய அனைத்து செலவுகளும் இந்த சுங்கக்கட்டணத்தை வைத்து தான் சீர்செய்யப்படுகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், இந்த சுங்கக்கட்டண உயர்விற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளின் படி சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்