தமிழக பள்ளி மாணவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை – அரசின் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் காகர்லால் உஷா அவர்கள், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கற்றல் தொடர்பான ஒழுங்குமுறைகளை செய்வதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களை ஆணையாக வெளியிட்டுள்ளார்.
ஒழுங்குமுறை நடவடிக்கை:
தமிழகத்தில் சமீப நாட்களாக பள்ளி குழந்தைகள் தொடர்பான பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மாணவர்களின் நடவடிக்கைகளை சீரமைக்கவும், அவர்களின் செயல்பாடுகளை சரி செய்யவும் அரசு தற்போது புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி, தமிழக முதன்மை செயலாளர் காகர்லால் உஷா அவர்கள் தற்போது அனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். மேற்படி, சுற்றறிக்கையில் பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
அரசின் அறிக்கையின் படி, ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லையென்றால் முதலில் சரியான கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கற்றலில் குறைப்படிருக்கும் குழந்தை என அடையாளம் காணப்பட்டால் தலைமை ஆசிரியர் குழந்தையை சிறப்பு கல்வியாளரிடம் அனுப்பி, குழந்தைக்கு உதவி செய்யலாம். கற்றலில் குறைபாடு இல்லாத குழந்தை என்றால், பள்ளி ஆலோசகர் குழந்தையின் படிப்பிற்கு தேவையான முறையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். குறிப்பாக, ஒரு குழந்தை பள்ளி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சேதமடைந்த பொருளுக்கு குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பாளி ஆவார், அவர் தான் அதை மாற்றி அமைத்து தர வேண்டும்.
Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
மேலும், ஆசிரியர்களை அவமதித்தல், பொது இடங்களில் இடையூறு செய்தல், உருவகேலி செய்தல், தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், மற்ற குழந்தைகளை அடித்தல், புகை பிடித்தல், பள்ளிக்கு இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருதல் இது போன்ற தவறுகளை குழந்தைகளை குழந்தைகள் செய்தால், பள்ளியின் ஆலோசகர் முதலில் தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதே போன்ற தவறுகளை குழந்தைகள் மீண்டும் செய்தால் அரசு அறிவித்துள்ள ஒழுங்கு முறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.