தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் – மீறினால் நடவடிக்கை!
சென்னையில் மாநகர போக்குவரத்து பணியாளர்களுக்கான நெறிமுறைகள் வெளியான நிலையில் அதில், அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவிப்பு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகள்:
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதிகமான மக்கள் அரசு பேருந்துகளை நம்பி இருக்கின்றனர். காலையில் வேலைக்கு செல்வது முதல் மாலை வீடு திரும்புவது வரை சொந்த வாகனங்களை விட அரசு பேருந்துகள் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, அந்தந்த பேருந்துகளில் இருக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் கடமையாகும். ஆனால் ஒரு சிலர் மது அருந்திவிட்டு வருவதாக சில புகார்கள் எழுந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வரக் கூடாது எனவும், அவ்வாறு பணிக்கு வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்பிடித்தல், மது அருந்திவிட்டு வரும் பணியாளர்களை பணிமனைக்குள் அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று முடங்கிய வாட்ஸ்அப் – அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த உத்தரவை மீறி வந்தால் பணியாளர்கள் மீது மேற்பார்வையாளர்கள், பாதுகாவலரின் புகாருடன் கிளை மேலாளரின் பரிந்துரையுடன் நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமில்லாமல் பணிமனைகளில் மேல்மாடிகள், பயன்படுத்தாத அறைகளை பூட்டி வைக்க வேண்டும் என தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.