திடீரென்று முடங்கிய வாட்ஸ்அப் – அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு!
உலகம் முழுவதும் கடந்த 25ம் தேதி வாட்ஸ்அப் செயலியானது 2 மணி நேரம் முடங்கியது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலி முடக்கம் குறித்து மெட்டா விரிவான அறிக்கை சமர்ப்பிக்க இந்திய தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ்அப் முடக்கம்:
உலக அளவில் சிறந்த தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப் கடந்த 25ம் தேதி எப்போதும் இல்லாத அளவிற்கு 2 மணி நேரம் முடங்கியது. இதனால் பயனர்களால் போட்டோ, ஆடியோ, வீடியோ போன்றவைகளை பகிர முடியவில்லை. தற்போது அலுவலக செயல்பாடுகள் பெரும்பாலும் வாட்ஸ்அப் மூலமாக தான் நடந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென வாட்ஸ் ஆப் முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
Exams Daily Mobile App Download
பலரும் தங்களது செல்போன்களில் வாட்ஸ்அப் செயலி செயல்படவில்லை என்று புகார் தெரிவித்து வந்தனர். மேலும் இன்ஸ்டா, டிவிட்டர், பேஸ்புக் போன்ற செயலியில் #whatsappdown என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது. இதற்கான காரணம் குறித்து கேட்ட போது மெட்டா நிறுவனம் இது தொழில்நுட்ப கோளாறு என்று கூறியது. மேலும் வாட்ஸ் அப்பை சரி செய்ய தேவையான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்தது.
தமிழகத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
ஆனால் என்ன பிழை என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை என்று மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த நிலையில் இந்தியாவில் வாட்ஸ் அப் செயலி முடங்கியதற்கான காரணத்தை விளக்கி அறிக்கை சமர்ப்பிக்க மெட்டா இந்திய நிறுவனத்திற்கு மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.