இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கவலையில்லை – உணவு ஆணையத்தின் முக்கிய அறிவுறுத்தல்!
தமிழக ரேஷன் கடைகளில் வயதானவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிற நபர்களை அனுப்பி பொருட்களை பெறலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கான படிவத்தை வழங்க ரேஷன் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகார சான்று:
தமிழக ரேஷன் கடைகளில் வயதானவர்கள் ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களில் யாரேனும் ஒருவர் அல்லது வேறு நபர்களை அனுப்பி வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த வசதியை பெற விரும்புபவர்கள் www.tnpds.gov.in என்ற இனையதள பக்கத்தில் இருந்து உணவு வழங்கல் துறையின் அங்கீகார சான்று விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முறையாக பூர்த்தி செய்து ரேஷன் கடை ஊழியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்படிவத்தை கடை ஊழியர்களிடம் இருந்தும் பெறலாம்.
SBI வங்கியின் சிறந்த முதலீடு திட்டம் – வட்டியுடன் மாதந்தோறும் வருமானம்!
இந்த அங்கீகார சான்று படிவத்தை ரேஷன் கடை ஊழியர்கள் தருவதில்லை என்று அண்மையில் புகார்கள் வந்தது. இந்த புகார், உணவு வழங்கல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து படிவம் எளிதில் கிடைக்க வழி வகை செய்யுமாறும் அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அங்கீகார சான்று படிவம் அனைத்து ரேஷன் கடைகளிலும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உணவு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.