தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – முதன்மை செயலாளர் சுற்றறிக்கை!

0
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு - முதன்மை செயலாளர் சுற்றறிக்கை!
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு - முதன்மை செயலாளர் சுற்றறிக்கை!
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – முதன்மை செயலாளர் சுற்றறிக்கை!

தமிழகத்தில் தற்போது 1 – 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை பள்ளி நிர்வாகத்திற்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவு:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு முழு நேரமும் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் நேரடி வகுப்பில் இயல்பாக பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த கல்வியாண்டில் பாதி நாட்கள் கொரோனா தாக்கத்தால் விடுமுறை விடப்பட்டிருந்தால் அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வண்ணமாகவும், மாணவர்களுக்கு விரைந்து பாடங்களை நடத்தி அவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் நோக்கிலும் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

மின் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த கோரிக்கை? மின்வாரியம் அறிவுறுத்தல்!

நடப்பாண்டு கல்வியாண்டில் திட்டமிட்டபடி ஜூன் மாதத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து முதன்மைச் செயலர் அணைத்து தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதில் ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வர வழைக்க கூடாது. பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!