தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
வேலூர் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளுக்கு மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொபைல் போனுக்கு தடை:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது 2021 – 2022ம் கல்வியாண்டின் நிறைவு பகுதிக்கும் நாம் வந்து விட்டோம். நேற்று முதல் செய்முறைத் தேர்வு தொடங்கி விட்டது. அடுத்தாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. 12ம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. பள்ளி நாட்கள் முடிவடைந்து தேர்வுக்கு செல்ல உள்ள நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்படும்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிரிவு உபசார விழாவிற்கு அனுமதி தாரததை அடுத்து மாணவர்கள் மேசை, நாற்காலிகளை உடைத்துள்ளனர். இதனை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர். இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வர தடை விதித்துள்ளது. தமிழக பள்ளிகளில் எப்போதும் மாணவர்களுக்கு செல்போன் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது. இதனை மீறி மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமலும் ஆசிரியர்களுக்கு தெரியாமலும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்தபடி செல்போன் உபயோகிக்கும் காட்சிகளை நாம் பார்த்து வருகிறோம். இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செல்போன் எடுத்து வந்தால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.