தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு – இயற்கை பேரிடர் குறித்த எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாகவே மழை பெய்ய தொடங்கிவிட்ட நிலையில், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதிய உத்தரவு:
தமிழகத்தில் ஏழை எளிய பொதுமக்கள் பலர் ரேஷன் கடை பொருள்களை நம்பி இருக்கின்றனர். அதற்கு தகுந்தாற் போல அரசும் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவு பொருள்களை வழங்கி வருகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாகவே மழை பெய்ய தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டுகளில் மழையால் ரேஷன் பொருள்கள் பல சேதாரம் அடைந்தது.
அது போல தற்போது நடக்காத வண்ணம் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் படி மழை மற்றும் புயல் காரணமாக அதிகம் பாதிக்கப்படும் தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிக்கு மாற்ற வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் சிறப்பு ஒதுக்கீடு பெற்று பாதுகாப்பான இடங்களுக்கு ரேஷன் பொருள்களை மாற்ற வேண்டும்.
மேலும் அவ்வாறு மாற்றும் போது பொருட்களின் நகர்வு மற்றும் விநியோகத்தை தினமும் கணித்து, அனைத்து கிடங்குகள் மற்றும் ரேஷன் கடைகளில் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் அவசரகால தேவையான அரிசி, மண்ணெண்ணெய், உப்பு, மெழுகுவர்த்தி, அவசர கால விளக்கு மற்றும் தீப்பெட்டிகள் ஆகியவை வைத்திருக்க வேண்டும். இயற்கை பேரிடர் காரணமாக அவசர நிலை ஏற்பட்டால் அதிகமான மண்ணெண்ணெய் தேவைப்படும். அதனால் அந்த மண்ணெண்ணெய்களை வைத்து கொள்ள தேவைப்படும் பேரல்கள் வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் வருகிற 15ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 40,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள்!!
Exams Daily Mobile App Download
மேலும் வெள்ளத்தால் அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்டால் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும், மேலும் அவ்வாறு அப்புறப்படுத்திய பொருளுக்கு பதிலாக நல்ல பொருட்களை உடனே கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை தகுதியான நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் மழை காலங்களில் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் நனையாமல் இருக்க தார் பாய் கொண்டு மூடப்பட வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்