தமிழகத்தில் வருகிற 15ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 40,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள்!!
சென்னையில் 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இம்முகாமில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டுமா? இதற்கான முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 15ம் தேதி அன்று சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகமானது இராயப்பேட்டையில் The New College-ல் நடைபெற உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
Exams Daily Mobile App Download
அத்துடன் இந்நிறுவனங்கள் 40,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அத்துடன் டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநர், நர்ஸிங், பார்மசி, கணினி பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் இம்முகாம் மூலமாக மாற்றுத்திறனாளிகள், உடல் தகுதியுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்ளலாம்.
‘இந்த’வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? – உஷார் மக்களே! பணம் பறிபோகும் அபாயம்!
இவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளது. அத்துடன் இம்முகாமிற்கு வருகை தருபவர்கள் தங்களின் சுயவிவரத்தொகுப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்விச்சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவைகளின் நகல்களுடன் வருகை புரிய வேண்டும். இம்முகாமில் கலந்து கொண்டு உங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பை பெற்று பயன் அடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்