தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புகார் அளிப்பது எப்படி?
தமிழக ரேஷன் கடைகளில் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்கள் எடை குறைவானதாகவோ அல்லது Expiry date இல்லாமலோ இருந்தால் புகார் அளிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
ரேஷன் பொருட்கள்
தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் தற்போது “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு”, என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை எளிதாக பெற முடியும். இத்திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அத்துடன் தற்போது அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதனால் தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது பெரும்பாலான ரேஷன் கடைகளில் உள்ள கரும்பலகையில் பொருட்களின் விலை மற்றும் expiry date ஆகியவை குறிப்பிடப்படுவதில்லை. மேலும் ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களின் தரத்தின் நம்பகத்தன்மை, விலை மாற்றம், எடை குறைவு உள்ளிட்ட பல்வேறு வகையான புகார் அளிப்பது யாரிடம் என்று தெரியாமல் உள்ளன. இது தொடர்பாக கூட்டுறவு சங்க ஊழியரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
CCRAS மத்திய கவுன்சிலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – 310 காலிப்பணியிடங்கள்..!
இது குறித்து கூட்டுறவு சங்க ஊழியர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது, ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களில் எடை குறைவாக இருப்பது, கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது, விலை Expiry date ஆகியவை குறிப்பிடப்படாமல் இருப்பது உள்ளிட்டவை ஏற்பட்டால் இது குறித்த புகாரை உணவு பொருள் வழங்கல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கலாம். அதாவது 044-28583222 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு ரேஷன் கார்டு தாரர்கள் தங்கள் தரப்பில் உள்ள புகார்களை அளிக்கலாம். இது குறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.