TNPSC Group 2, 2A தேர்வு விடைக்குறிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தற்காலிக விடை குறிப்பை இன்னும் ஒரு வாரத்திற்குள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-2 தேர்வு
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 முதலிய தகுதி தேர்வு நடத்தப்பட்டு தகுதியான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த சனிக்கிழமை அன்று குரூப்-2 தேர்வின் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. 5,529 காலிபணியிடங்களுக்கு 11,78,000 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 9.94 லட்சம் பேர் மட்டுமே இந்த தேர்வை எழுதியுள்ளனர். ஜூன் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், குரூப்-2 தேர்வில் பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாகவும், அந்த தவறான கேள்விகளுக்கான மதிப்பெண்ணை வழங்க வேண்டும் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், குரூப்-2 தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியிலும் தவறு இல்லை. கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் கூட எந்த தவறும் இல்லை. ஒவ்வொரு தகுதி தேர்வின் போதும் இது போன்ற சர்ச்சைகள் வருவது இயல்பு தான் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
குரூப்-2 தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்பு இன்னும் 4 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், விடைக்குறிப்பு டிஎன்பிஎஸ்சியின் அதிகார பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைக்குறிப்பு வெளியிட்ட பிறகு அந்த விடைகுறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அந்த ஆட்சேபனைகளை பதிவு செய்யவும் ஒரு வாரம் வழங்கப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தேர்வாளர்களின் ஆட்சேபனைகளை கேட்ட பின்பு தான் தேர்வுக்கான விடைகளை தேர்வு குழு இறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.