TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் TNPSC குரூப் 4, VAO தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
கொரோனா பாதிப்பால் 2021 ஆம் ஆண்டு அரசு போட்டித்தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு TNPSC குரூப் 4 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. குரூப் 2 தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதத்திலும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வை எழுத தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான தேர்வாளர்கள் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டதால் தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழக அரசு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அறிவித்திருந்தது. இதுவரை நடந்த குரூப் 4 தேர்வுகளில் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழி பாடப்பகுதியிலிருந்து 150 மதிப்பெண்களுக்கும், பொது அறிவு 150 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும். இதில் மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும். ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பின் அடிப்படையில் மொத்தமாக 300 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு திடீர் முடிவெடுத்து ஆங்கில மொழிப் பாடத்தை நீக்கி தமிழ் மொழித் தேர்வை தகுதித் தேர்வாக அறிவித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி DA உயர்வு 3% – விரைவில் அறிவிப்பு வெளியீடு!
இதனால் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் குரூப் 4 தேர்வில் கேள்விகள் கேட்கப்படுமா அல்லது புதியதாக பாடத்திட்டம் வெளியிடப்படுமா என்று கேள்வி எழுந்தது. தற்போது குரூப் 4 தேர்வுகான புதிய பாடத்திட்டத்தை TNPSC தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலம் நீக்கப்பட்டு தமிழ் மற்றும் பொது அறிவு என 2 பிரிவுகள் உள்ளன. தமிழ் மொழித்தாள் பகுதி 1 ஆகவும், பொது அறிவு பகுதி 2 ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது அறிவு பிரிவில், அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு, இந்திய ஆட்சி, இந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் பாடப்பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தொண்டுகளும் இடம்பெற்றுள்ளன.